நல்லெண்ணம் அழகாம் - இராஜ்குமார்

நல்லெண்ணம் அழகாம்
=======================

நான் மட்டும் வாழ
வழி செய்த போது
வாழ்த்திய நெஞ்சங்கள்

பிறர் வாழ
வழி செய்யும் போது
தடையாய் நிற்பதேன் ?

தான் மட்டுமே வாழனுமா ?
இல்லை
பிறர் வாழ வேண்டாம்
என்ற எண்ணமா ..?

நல்லெண்ணத்தின் நடுவில்
பொறாமையை புதைத்து
வைப்பதே நமது
மனிதனின் மாபெரும் குணமாம்

அழகிற்கு பூசும்
நல்லெண்ணத்தை பறித்து
ஒப்பனையின்றி ஓடவிட்டால்
நடுத்தெரு நாய் தான் நாமும்

- இராஜ்குமார்

நாள் : 10 - 12 - 2012

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (12-Oct-14, 9:23 pm)
பார்வை : 528

மேலே