கவியால் பேசிடு-வித்யா

கவியால் பேசிடு....!-வித்யா
பெ:எங்கிருந்தாய் நீ......?
ஆ:உனக்காக எங்கெங்கிலும்.......
பெ:நீ கவிஞனா?
ஆ:ஆம்....உன்னை மட்டும் எழுதுவேன்....
பெ:உன் பேனா அழகா...?
ஆ:ம்ம்ம்.....நிச்சயமாக.....
பெ:உன் விரல்கள் நலமா.....?
ஆ:தேடலின் சுகங்களில் தொலைந்துக் கொண்டே......
பெ:மலர்களின் இதழ் திறக்குமா உன் கவி......
ஆ:ம்ம்....ஒற்றை மேகத்தின் தவம் கலைத்து.....ஊரெங்கும் நனைக்கும்.....!!
பெ:நிலவை இரசிப்பவனா....? நேசிப்பவனா.....?
ஆ:நிலவு வளர்ப்பவன்.....நிலவால் வளர்பவன்......
பெ:காதல்........?
ஆ:உன் கண்கள்......
பெ:போ..........!!
ஆ:தொலைந்து போகவா.....
பெ:ம்ம்.....
ஆ:மழைக்குள்.....?
பெ:ஈரக்காற்றில்......!!
ஆ:உன் பேச்சு அழகு......
பெ:அப்படியா.......
ஆ:ம்ம்.....ஆழ்ந்த தியானத்தில் லாவகமாக விலகும் இலையின் நுனி போல.....
பெ:உளறல்....?
ஆ:கடல் விரித்து....
வானம் அமைத்து
நிலவென உன்னை நிறுத்தி
என் கவிகள் விண்மீனென சிதற விட்டு
புது பிரபஞ்சம் அமைத்து
அதில் சூரியன் பூமியைச் சுற்றிவர செய்வேன்......
பெ:ம்ம்....... நன்றாகவே உளறுகிறாய்......!!
ஆ:ஆம்......ஈரமாகவே உலர்கிறேன்.....
பெ:கவிதை........??
ஆ:நீ.........!!
பெ:நினைத்தேன்......உன் பதில் இதுவென.....
ஆ:நினைக்காவிடில்தான் ஆச்சர்யம்.....
தன்னிலையறியா கவியுண்டோ.....?
பெ:கவிக்கொரு கவி சொல்லும்...
கவிஞரே.......!!
ஆ:பிரம்மனின் தூரிகைத் தவறி
மண்ணில் விழுந்து
கண்ணில் நுழைந்து
என்னில் நிலைத்தது.......
என் உயிரை வரைந்தது......!!
பெ:காமம்.....?
ஆ:துறவறம்......?
பெ:என்ன.....?
ஆ: ஹ ஹா.......
மெழுகென உருகி
திரி தீர்ந்தும் எரியும்.....
முற்றும் துறந்தும்
ஆடையோடுத் திரியும்
நாணம் தொலைத்து
ஞானம் தேடும்
துறவுநிலை.........
பெ:பெண்மை.......?
ஆ:மென்மையில் வன்மம் புதைத்து
சுடாமல்,குளிராமல்
இதமான பதத்தில்.....
பெ:போதும்......
ஆண்மை.......?
ஆ:அடிமை.....!!
பெ:இது என்ன புதுக்கதை.....?
ஆ:மௌனங்களின் புலம்பல்
போரின் வேர்
புன்னகைகளின் சுகந்தம்
கண்ணீரின் நிறம்
காதலின் வேதம்
வாசிக்கத் தெரிந்ததோடு
கொஞ்சம் கண்ணியம்......!!
பெ:அரசியல்.......?
ஆ: மீனா....ட்சி..... இல்லையென்றால் சுந்தரேஸ்வரர் ஆட்சி.... ஹ ஹா...
பெ:குடும்ப அரசியலா.....!! ம்ம்......
சரி...வாழ்க்கை.......?
ஆ:பயணங்களின் படிக்கட்டு
தேடலின் நிமித்தம்
தவறுகளின் நீட்சி...
சரிகளின் சுருக்கம்......!!
பெ:நீ நூலகமா......?
ஆ:ஹ ஹா..அதில் நீ எந்த புத்தகம்.....?
இல்லை... நான்
மயிலிறகு வைத்து மூடிய புத்தகம்.....
பக்கத்திற்குப்பக்கம்
புது சுகந்தம்......!!
பெ:நான்....?
ஆ:நீதான்.....
பெ:ம்ம்....நீ.....?
ஆ:ஆம்....நான் தான்.....
பெ:போ.......
ஆ:ம்ம்......இப்போது மழைக்குள் தானே......
பெ:இல்லை.....மலை உச்சிக்கு.......
ஆ:குதிக்கவா....
பெ:இல்லை வானம் ரசிக்க....!!
ஆ:ம்ம்.....சரி போகிறேன்.......
............................................
............................................
............................................
பெ:யாரிவன்....?????????
பூவுக்குள் திராவகம் சுரக்கிறதே
இவன் வரிகள் கேட்டு.....
சூரிய விதையில் வந்து
விருட்சமாகி.....
தொலைந்துக்கொண்டே
தொலைத்துக் கொண்டே
எதைத்தேடிச் செல்கிறான்....இவன்....??
இவன் தேடலின் தொடக்கத்தில்
எதை நினைத்திருப்பான்......
தேடலின் முடிவினில்
எதைப் பெற்றிருப்பான்.....
நிச்சயமாக இவன் தேடல்
முடியப் போவதில்லை....
இவன் முடிவாக எதையும்
ஏற்கப் போவதுமில்லை.....
இவன் பைத்தியமோ.....
நான் வழிப்போக்கனாக
விரும்பவில்லை...
இவனைப் பின் தொடரப் போகிறேன்.....!!
ஆ:யாரிவள்........???
என் துறவுக்குத்
தடையாக இருப்பவள்......!!
இல்லை இல்லை.....
இவளையணிந்துக் கொண்டே
துறவியாகிறேன்.....!!
இவள் எதைத் தொலைத்திருப்பாள் ?
என்னில் எதைத் தேடுகிறாள்......?
தெளிவான கேள்விகளில்
சித்தம் கலங்கியவளோ...?
இல்லை என் சித்தம் கலக்கியவள்......!!
ஆ/பெ:என் உணர்வானவள்(வன்)....
*********************************************
இது யார் மனத்தையும் புண்படுத்துவதற்காக அல்ல........
இக்கவியில் வரும் கவிப்பாத்திரங்களும், சம்பவங்களும் கற்பனையே.......!
ஹ ஹா......!!