நானும் உன்னை இன்றுவரை காதலிக்கிறேன் 555

என்னவளே...

பள்ளியில் உனக்காக நான்
கிறுக்கிய கிறுக்கல்களை...

நீ இன்னும்
மறக்கவில்லையா...

உன் பார்வையாலேயே
என்னை எரித்தாய்...

காதல் என்னும் கடிதம்
உனக்கு நான் கொடுத்ததால்...

உன் வீட்டு சுபநிகழ்சிகளுக்கு
வந்த என்னை கண்டு...

பார்வையாலே நலம்
விசாரித்தாய்...

உன் சொந்தங்கள் கூடி
இருக்கும் நேரத்தில் கூட...

எனக்கு மட்டும் புரிகிறது...

எளிய அசைவில் உன்
விழிகள் என்னிடம் கேட்கும்
விடைபெறல்...

உன் விழிகளுக்கு பதில்
சொல்லாமல் விடை பெற்றேன்...

நானும் உன்னை
இன்றுவரை காதலிக்கிறேன்...

சொல்லாமல் சொன்ன
என் விழிகளை அறிந்தாயா...

உனக்காக நான் மீண்டும்
கிறுக்குவேன்...

விழிகளால் பதில்
சொல்வாயா இப்போதாவது.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (18-Oct-14, 2:33 pm)
பார்வை : 109

மேலே