உதவும் கரம் எங்கே- நாகூர் லெத்தீப்

நடைபயணம்
வெகுதூரம் சிரமம்தான்
பழமைதான்.......!

விடுதலை
இல்லாத சிறைச்சாலை
உலகினிலே........!

உதவும் கரம்
எங்கே தினமும்
தேடுகிறேன் கை
இருந்தும்........!

வாழ்க்கை
முறை மாறிவிட்டதே
எதனால்
பணத்தினாலா........!
குனத்தினாலா........!

சிதறும்
சில்லறை
காசுகள் இல்லை
உறவுகளே
உணர்வுகளே..........!

விபத்தில்லாத
வீதிகளை
தேடுகிறேன்
விதியை மாத்திட......!

எழுதியவர் : நாகூர் லெத்தீப் (21-Oct-14, 10:45 pm)
பார்வை : 77

மேலே