பகிஷ்கரிப்போம் சீனப்பொருட்களை

இரண்டாவது சுதந்திரப்போராட்டம் , ஏன்..மூன்றாவது உலகமகாயுத்தமானது... கொடூரமான சீனப்பொருட்களுக்கு எதிராக நடத்தப்பட வேண்டும் என்பதே இன்றைய அபாயகரமான சூழலில் அவசரமாக செய்ய வேண்டியது...

உலகநாடுகளின் ஒட்டுமொத்த பொருளாதார வீழ்ச்சிக்கு உண்மையான காரணம் சீனாவின் "போலிகளின்" ராஜாங்கம்தான்...உலகின் எந்த மூலையிலும் கண்டுபிடிக்கப்படுகிற எப்படிப்பட்ட தொழில்நுட்பம் வாய்ந்த கருவிகளும், உதிரிபாகங்களும் அதிகபட்சம் ஒரே மாதத்தில் அச்சு,அசலாக அதேபோல தயாரிக்கப்பட்டு, மார்க்கெட்டில் ஒரிஜினல் பொருட்களுக்கே சவால் விடுகிற வகையில் விற்கப்படுவதை ஒரு செல்போன் விசயத்திலேயே நாம் அறிவோம்...35000 ரூபாய்க்கு விற்கிற சாம்சங் மாடலைப்போல போலியை வெறும் 9000 ரூபாய்க்கு உற்பத்தி செய்து விற்பதும், நம்ம ஊரில் 250 ரூபாய்க்கே உற்பத்தி செய்யமுடியாத பொம்மைகளை வெறும் 60 ரூபாய்க்கு அடிமாட்டு விலையில் தயாரித்து விற்பதும் சீனர்களின் தொழில்நுட்ப அறிவென்றும், கோடிக்கணக்கில் உற்பத்தி செய்யும் (Mass Production) வல்லமையென்றும் வாய்பிளந்து வியந்து போயிருந்தோம் இத்தனை நாளும்...

பிறநாட்டு தொழில் நிறுவனங்கள் நலிவடைந்தால் என்ன...நாசமாய் போனால் என்ன...நம்நாட்டில் கீழ்த்தட்டைச் சேர்ந்த சாதாரண உபயோகிப்பாளர்கள் கூட வாங்கமுடிகிறதே..என்கிற எண்ணத்தில் சீனாவின் பொருட்களை
வாங்கி,வாங்கி உபயோகப்படுத்தியதின் விளைவினை இதோ அனுபவிக்க தொடங்கியிருக்கிறோம்...

ஆட்டை கடித்து,மாட்டை கடித்து கடைசியில் நாம் சாப்பிடுகிற அரிசியிலேயே கைவைத்துவிட்டது சீனா இப்போது..பிளாஸ்டிக் அரிசிதான் சீனாவின் லேட்டஸ
அதிர்ச்சியடையாதீர்கள் நண்பர்களே..
உருளைக்கிழங்கு மாவு, சிந்தடிக் ரெசின் இரண்டையும் கலந்து அட்டகாசமான அரிசியினை தயாரித்து மார்க்கெட்டிலும் விற்பனைக்கு விட்டிருக்கிறார்கள் சீனர்கள்.. மூன்று கப் இந்த உணவினை சாப்பிட்டால் , ஒரு பாலிதீன் பையினை முழுசாக முழுங்கியிருப்பீர்கள் நீங்கள்.. அறியாமலேயே...


இந்திய ஜவுளித்தொழிலை நாசம்செய்ததும் சீனாவே..அதன் பாதிப்பிலிருந்து மெல்லமெல்ல இப்பொழுதுதான் மீண்டுவருகிறது திருப்பூர்..

தாய்ப்பாலுக்குத்தான் இதுவரை போலி கண்டறியப்படவில்லை..இப்போது அதிலும் ஏதாவது ஒரு நச்சு வேதிப்பொருளைக்கொண்டு கலப்படத்தை சீனர்கள் கண்டறிந்துவிடுவார்களோ என்கிற அச்சம் சூழ்ந்திருக்கிறது உலகை..( மாட்டுப்பாலுக்கு மாற்றினை கண்டுபிடித்து பயன்படுத்தியதில் கிட்டத்தட்ட 300000 பேர் பாதிக்கப்பட்டதும்,6 குழந்தைகள் இறந்ததும் வேறு தனிக்கதை).
நரகம் எங்கிருக்கிறது ? என்று யாராவது உங்களை கேட்டால் சீனாவின் பக்கம் தாராளமாக இனி நீங்கள் கையை காட்டலாம்...

கம்யூனிச சித்தாந்தத்தில் மலர்ந்த நாடு..உழைக்கும் வர்க்கத்தின் சொர்க்கபூமி..என்றெல்லாம் ஒருகாலத்தில் அழைக்கப்பட்ட ஓரு தேசம்..இன்றைக்கு தன் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த,பிற நாட்டு தொழிலாளர்கள்,உழைப்பாளிகள்,
அடித்தட்டு மக்கள் வயிற்றில் அடித்தாலும் பரவாயில்லை... எனும் கம்யூனிஸ சித்தாந்தத்தின் நேரதிர் திசையில் ,அதுவும் உச்சவேகத்தில் பயணித்துக்கொண்டிருப்பதை ..என்ன "இஸம்" என்று அழைப்பதோ..தெரியவில்லை... மிருகயிசம் எனலாமோ ??!

மஞ்சளாற்று நாகரிகம் , அன்று மனித இனத்தின் தொடக்கத்தை , மாண்பினைச் சொன்னது.. இன்றோ மனித இனத்தின் முடிவுரையையே எழுதிக்கொண்டிருக்கிறது.. !!

சீனாப்போருட்களை பகிஷ்கரிப்பதே இந்த தருணத்தில் நாமனைவரும் செய்யவேண்டிய அவசர, அவசிய கடமை .

"கொலைவாளினை எடடா - மிகு கொடியோர் செயல் அறவே "

எழுதியவர் : முருகானந்தன் (21-Oct-14, 11:15 pm)
சேர்த்தது : MURUGANANDAN
பார்வை : 63

மேலே