உன் மௌனமும் நான் ரசிக்கும்

உன்னை சேராமல்
உன் நினைவால் வாடாமல்
தினம், தினம் கவி எழுத
என்னால் முடியாதே

வாட்டும் தனிமையிலும்
உன் வறட்டு பிடிவாதம்
உன் மௌனமும் நான் ரசிக்கும்
ஒரு கவிதை போலாகும் ....

தினம் தினம் காத்திருக்க
என் தேடல் நான் முடிக்க
உன் காதலை சொல்லும்வரை
தொடருமே என் கவலை

எழுதியவர் : ருத்ரன் (28-Oct-14, 1:53 pm)
பார்வை : 121

மேலே