நினைவுகள்

மனதின் இடுக்குகளில் எல்லாம்
தேங்கி நிற்கும் உன் நினைவுகள் -சாலை
ஓரத்தில் நிற்கும் மழை நீர் போலவே!
மனிதர்களுக்கு இடையூறானதால்
உறிஞ்சப்படுகின்றது மழை நீர் -
என்ன ஆச்சர்யம்?
இறைக்க இறைக்கப் பெருகும் சுனை நீரானாய் நீ!

எழுதியவர் : சஹானா (29-Oct-14, 4:14 pm)
Tanglish : ninaivukal
பார்வை : 128

மேலே