நட்பு

நடை பழகிய நாட்களில்
என் தந்தையின் நம்பிக்கையில்
நீ இருந்தாய் !
அரவணைக்கும் வேலையில்
என் அன்னையின் அன்பினில்
நீ இருந்தாய் !
அரம் சொல்லித் தருகையில்
என் ஆசானின்
அக்கரையில் நீ இருந்தாய் !
முகம் தெரியா மனிதர்களின்
முதல் புன்னகையில்
நீ இருந்தாய் !
முதன் முதலாய் அரும்புகையில்
என் காதலியின் கண்களிலே
நீ இருந்தாய் !
கவியொன்று நான் எழுதுகையில்
வரும் கைதட்டலில்
நீ இருந்தாய் !
காலை மாலை இரவு என
காணும் யாவிலும்
நீ கலந்திருந்தாய் !
கற்பென்ற சொல்லுக்கு
மறு இலக்கணமாய்
நீ இருந்தாய் !
நாடி வந்த யாவர்க்கும்
நல்லதொரு வால்வளித்தாய் !
நட்பே !
நீ இல்லையெனில்
நவநாகரீக உலகமிது
நரகமாகிப் போயிருக்கும் !