பிள்ளை மனம்

நான் உள்ளிருந்த நாட்களெல்லாம் ,
எனக்கு உயிர் கொடுத்த என் சுவாசம் எங்கே ?

எனை மறந்து உறங்கிய
என் தாய் மடி எங்கே?

பால் நிலா காட்டிய விரல்கள் எங்கே ?

பால் சோறு ஊட்டிய கைகள் எங்கே?

நான் நடை போடும் அழகை ரசித்த கண்கள் எங்கே ?

அன்பில் விளைந்த என் தாய் மடி எங்கே ?

வரம் கொடு வரம் கொடு இறைவா ..........

இன்னும் ஒருமுறை என் அன்னை மடி பார்ப்பேனா ?
மீண்டும் ஒருமுறை என் தாய் முகம் பார்ப்பேனா?

எழுதியவர் : அருள்செல்வன் (2-Nov-14, 3:01 pm)
சேர்த்தது : கல்லறை செல்வன்
Tanglish : pillai manam
பார்வை : 255

மேலே