காதல் பால்

வம்பாய் உரையாடி வந்தணைக்கும் வாயாடி
தெம்பாம் எனக்குநீ தேன்.
சும்மா இராதென்னை சுட்டித் தனம்காட்டி
கும்மாளம் போடும் குயில்.
பக்கம் வரும்போது பாசத்தால் பேசிடும்நீ
துக்கம் தொலைக்கும் மருந்து.
தலைகோதி விட்டென்னைத் தன்மடியில் வைப்பாள்
நிலையது வேண்டும் நிதம் .
அழைக்காத நாளெல்லாம் நாளல்ல அன்பால்
சுழற்றி அடிப்பாள் சினந்து .

எழுதியவர் : அபி (5-Nov-14, 8:19 am)
Tanglish : kaadhal paal
பார்வை : 115

மேலே