இன்பமுடன் இவ்வுலகில் வாழ்ந்திடுக
அன்பெனும் அழகுமலர் எடுத்து
*** பண்பெனும் நூலில் கோர்த்து
ஆற்றலெனும் மாலை தொடுத்து
*** வாழ்வெனும் உருவிற்கு சூடிடுக !
பொறாமையெனும் நச்சைத் துறந்து
*** பொறுமையெனும் ஆடை உடுத்தி
அமைதியெனும் அணிகலன் அணிந்து
*** அருளாளன் எனும்பேர் பெற்றிடுக !
இல்லாமை களைந்திட முயற்சித்து
*** கல்லாமை நீங்கிட பணிசெய்து
பொல்லாமை அறவே ஒழித்திட்டு
*** வளமையோடு என்றும் வாழ்ந்திடுக !
தீண்டாமை அரக்கனை அழித்திட்டு
*** ஒற்றுமை எண்ணமே ஓங்கிட்டு
சாதிமதங்களை முற்றிலும் ஒதுக்கிட்டு
*** சமத்துவ சமுதாயமாய் வாழ்ந்திடுக !
ஏழ்மையே இல்லாநிலை உருவாக்கிட்டு
*** எல்லோரும் ஒரேநிலை என்றாக்கிடுக !
இவ்வழியே நம்வழியென சூளுரைத்து
*** இன்பமுடன் இவ்வுலகில் வாழ்ந்திடுக !
பழனி குமார்