இன்பமுடன் இவ்வுலகில் வாழ்ந்திடுக

அன்பெனும் அழகுமலர் எடுத்து
*** பண்பெனும் நூலில் கோர்த்து

​ஆற்றலெனும் மாலை தொடுத்து
*** வாழ்வெனும் உருவிற்கு சூடிடுக !

பொறாமையெனும் நச்சைத் துறந்து
*** பொறுமையெனும் ஆடை உடுத்தி

அமைதியெனும் அணிகலன் அணிந்து
*** அருளாளன் எனும்பேர் பெற்றிடுக !

இல்லாமை களைந்திட முயற்சித்து
*** கல்லாமை நீங்கிட பணிசெய்து

பொல்லாமை அறவே ஒழித்திட்டு
*** வளமையோடு என்றும் வாழ்ந்திடுக !

தீண்டாமை அரக்கனை அழித்திட்டு
*** ஒற்றுமை எண்ணமே ஓங்கிட்டு

சாதிமதங்களை முற்றிலும் ஒதுக்கிட்டு
*** சமத்துவ சமுதாயமாய் வாழ்ந்திடுக !

ஏழ்மையே இல்லாநிலை உருவாக்கிட்டு
*** எல்லோரும் ஒரேநிலை என்றாக்கிடுக !

இவ்வழியே நம்வழியென சூளுரைத்து
*** இன்பமுடன் இவ்வுலகில் வாழ்ந்திடுக !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (5-Nov-14, 7:35 am)
பார்வை : 102

மேலே