ஊமை 0049
கண்ணாடி முன்னின்றபடி
என்னிடம் பல நூறு வினாக்கள்
அனைத்தும் அவமானத்தின் வடுக்கள்
கொடுக்கின்ற சொத்துக்கள்
யாரின் பாவப்பதிப்புயிது
என்னை ஈன்றவர்களின்
பாவத்தின் பயனா?
என் முற் பிறவியில்
யான் செய்த பாவச்செயலா ?
இன் வாழ்வின் அர்த்தத்தை
அழுகையுடன் மட்டும் தான்
காண்பேனா?
எனக்குள் அழகாக பேசுகின்றேன்
அழகாக பாடுகிறேன் -ஆயினும்
வார்த்தைகள் வெளிக்கொணரும்
போது தான் ஊமையாகின்றேன்

