இந்த மண்ணுலகம்

கண்ணே!

நிழல் தரும்
மரம் போன்றும் ...

குளிருக்கு-
வெப்பம் தரும்
அழல் போன்றும் ...

பசிக்கு -
வாழை தரும்
கனி போன்றும் ...

நோய்க்கு -
மருந்தாகும்
தேன் போன்றும் -

மனதிற்குள் நீ-
மலர்ந்ததால் ...

இந்த மண்ணுலகம்
எனக்குப் பொன்னுலகமானது

எழுதியவர் : மா .அருள்நம்பி (9-Nov-14, 8:41 pm)
Tanglish : intha mannulagam
பார்வை : 120

மேலே