இந்த மண்ணுலகம்

கண்ணே!
நிழல் தரும்
மரம் போன்றும் ...
குளிருக்கு-
வெப்பம் தரும்
அழல் போன்றும் ...
பசிக்கு -
வாழை தரும்
கனி போன்றும் ...
நோய்க்கு -
மருந்தாகும்
தேன் போன்றும் -
மனதிற்குள் நீ-
மலர்ந்ததால் ...
இந்த மண்ணுலகம்
எனக்குப் பொன்னுலகமானது