காதலை விட்டு விடு -- குமரி

கல்யாணம் கொண்டால்
கருத்தரிப்பது நீ....
காதல் கொண்டால்
கருத்தரிப்பது நான்....!

புரியவில்லையா பெண்ணே.....

என் கை பிடித்தால்
உன்னில் பிறப்பது
புவி குழந்தை...!
உன் மெய் பிடித்தால்
என்னில் பிறப்பது
கவி குழந்தை...!

நீ பிரசவித்தால்
அது நம் குழந்தை...!
நான் பிரசவித்தால்
அது என் குழந்தை...!

போதும் பெண்ணே....
காதலை கைவிட்டு
கரத்தை பிடித்து விடு...!
என் சிரத்தில்
கவி கருதரிப்பதை
நிறுத்திவிடு..!

------------------------------
குறிப்பு: தோழர் நாகூர் கவியின் "காதல் பிரசவம்" கவிதையில் "பிரசவித்தாய்" என்ற வார்த்தை படித்தபோது பிறந்த கவிதை.

எழுதியவர் : குமரி பையன் (14-Nov-14, 4:15 pm)
பார்வை : 413

மேலே