உன் சிரிப்பு அலைகள்

கட்டுக்கு அடங்காத
உன் சிரிப்பு அலையால்
என்னை தொட்டு விட்டுச் செல்கிறாய்.
உன்னை விட்டு பிரிய மனமில்லாமல்
நானும் உன்னுடன் வரத்தான் ஆசை.
ஆனால் ஒவ்வொரு முறையும்
நீ என்னை தொட்டு விட்டு செல்லும் போது
கரையில் இருக்கும் என்னவனின் மனம்
கோபப்படுகிறது சிறு பொறாமையில் .
-புவனா சக்தி