என்றோ இறந்திருப்பேன்

என்னவனே ....
நினைவில் நேரில் வந்து ...
இன்பத்தை தராதவனே ...
இன்னும் நான் உயிருடன் ..
இருக்கிறேன் ....!!!

கனவில் வந்து -நீர்
போவதால் தான் என் ...
உயிர் இருக்கிறது ....
கனவிலும் வராது போனால் ...
என்றோ இறந்திருப்பேன் ....!!!

குறள் 1213
+
நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்.
+
கனவுநிலையுரைத்தல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 133

எழுதியவர் : கே இனியவன் (18-Nov-14, 9:54 am)
பார்வை : 78

மேலே