கட்டி போட்டுவிட்டார்கள்

கட்டி போட்டுவிட்டார்கள்
நானும் இப்போது
ஆடு குட்டி தான் ,

பயத்தை சொல்லி கொடுத்தார்கள்
அழுதுகொண்டே
அழகாய் பயந்தேன் ,

சுவைத்து பார்க்க பாகற்காய்
கொடுக்கவில்லை
கசப்பை இன்று உணர்கிறேன் ,

ஏன் பிறந்தோம் ?

பிறந்தது
தவறில்லை
அறிவு பிறந்தது தான்
தவறு ,

என் உணர்வுகள்
முழுமையாக
செயல்படவில்லை ..

எழுதியவர் : ரிச்சர்ட் (24-Nov-14, 4:42 pm)
சேர்த்தது : ரிச்சர்ட்
பார்வை : 87

மேலே