பாத்தாக்க சொல்லுங்க

பாத்தீகளா அவர...
பாத்தாக்க சொல்லுங்க
ஒரு பைத்தியக்காரி
காத்து கெடக்கேன்னு....

விடியலுல போனாக
வெரசா வரேன்னுட்டு....
இருட்டி போச்சு மக்கா
இன்னும் காங்கலையே அவர..

ஆக்கி வெச்ச சோறும்
எறக்கி வெச்ச பாலும்
என்ன போல கத்துருக்குமா மாமா
அத்தனையும் ஆறி போச்சு
எம் பொழப்பு நாறி போச்சு

வெறும் களத்து மேட்ட ஒட்டி கேடக்கவா
என்ன கெட்டி வந்தீகனு
கேக்க தான் ஆச...
அவுக மீசைய பாத்தா பயம் வருதே
எங்கிட்டிருந்து பேச....

போற வழியில பாத்தாக்க
சொல்லுங்க
பொட்ட புள்ள தனிச்சிருக்கு....
போகும்மையா வீட்டுக்குன்னு.....

எழுதியவர் : சந்தியா priya (25-Nov-14, 12:02 pm)
பார்வை : 124

மேலே