மாமா நீ எங்கருக்க

ஊர் உறங்கும் நேரம்
எம் மனசு கெறங்கி நோகும்
மாமன் வரும் வழி நோக்கி
கண்ணு ரெண்டும் தாவும்....

ஒத்தையில உன் ரோசா
தவிக்குதையா சீக்கிரம் வா....
உச்சி நிலா போகும் முன்னே
ஒரங்கிடலாம் மாமா வா....

வளவி சத்தம் கேக்கலியோ....
மாமா வஞ்சி இவ கை குலுக்க....
வந்து கொஞ்சம் பாருங்களேன்
கொஞ்சி கொஞ்சம் கூடுங்களேன்...

ஒடம்பு ரொம்ப நோகுறதோ...
அலுப்பும் கூட கூடுறதோ....
மாமன் மக கை பட்ட
அத்தனையும் மறையும் ராசா....

களத்து மேட்டில் உன் கை படும்
கள செடிய நா பொறக்கோணுமே.....
நித்தம் உன் கை பட்டு
சித்தம் எனக்கு குளிரோணுமே....

கண்ணிரண்டும் மை தீட்டி உனக்காக காத்திருந்தேன்
கடைசி வர நீ வரல...
கலங்காத மாமா தூசி பட்டு தான்
என் கண்ணு கலங்குச்சு....
மத்தபடி ஒண்ணுமில்ல.....

எழுதியவர் : சந்தியா பிரியா (25-Nov-14, 11:28 am)
பார்வை : 150

மேலே