பெண்ணே ......

பூக்களாய் பிறந்திருந்தால்;
ரசித்திருப்பாய்..,
உன் வீட்டு கிளியாய் இருந்திருந்தால்,
உன் இதழ் தொட்டிருக்கும்.....,
சருகாய் பிறந்திருந்தால்கூட
உன் பாதம் பட்டிருக்கும் ........,
பாவம் "நான்" !
மனிதனாய் பிறந்து
உன்னை காதலிதுவிட்டேன்.
உனக்கு பிடிக்காதவர் யாரென்றுகேட்டால்?
நிச்சயம் சொல் என் பெயரை,
புனிதப்படட்டும் நீ உச்சரிக்கும்போது ...............

எழுதியவர் : (7-Apr-11, 2:40 pm)
சேர்த்தது : கோ.சௌந்தி
பார்வை : 463

மேலே