அன்புள்ள அப்பா

அன்புள்ள அப்பாவுக்கு...


அலட்சியமாய் நான் வதைத்த
போதும் அன்பு மாறாமல்
அனைத்தவன் நீ ,


வாழ்க்கையின் எத்தனையோ
சறுக்கல்களில் தோள்
தந்தாய் எனக்கு துணையாய்,


என் முகம் வாடியப் போதெல்லாம்
முதலில் அறிந்தவன் நீ!


கண் கலங்கும் வேளைகளில்
கண்ணீர் துடைத்தவன் நீ,


கைமாருக்காக காத்திருக்கையில்
காலத்தின் கொடுமைக்கு
நானும் ஆளானேன் ,


என்னை காலமெல்லாம் சுமந்தவன் நீ
உன் கடைசி பயணத்தில்
நால்வரோடு நானும்,

வாழ்க்கைக்கு வழிகாட்டிய
உனக்கு இறுதி வழி காட்டியதில்
கண்கள் கரைந்து போனது,

வெய்யில் படாது வளர்த்தாய்
உன்னை தீயில் சுட்ட போது
எரிந்து சாம்பலாகியது
என் மனம்,

ஆயிரம் அவதார கடவுள் இருந்த
போதும்
எனக்கு பிடித்தது நீயே


- மழைக்காதலன்

எழுதியவர் : மழைக்காதலன் (26-Nov-14, 3:58 pm)
Tanglish : anbulla appa
பார்வை : 139

மேலே