இனி ஏன் பயம் நமக்கு

இனி ஏன் பயம் நமக்கு.

பெண்களை கொடுமை படுத்தும்
ஆண் கொடுரன்களை..
அழகாய் வெளிபடுத்தும்
அரங்கம் இதுவல்லவா..

அநியாயம் அனுபவித்து
அழது புலம்பும் பெண்ணை எல்லாம்
அமைதி படுத்தும்.. மன்றம்
இதுவல்லவா...

நீதி மன்றம் நமக்கு இருக்க
சொல்வதற்கு என்ன இருக்கிறது
சொல்லிவிடுவோம் இங்கே நாம்
பெண்களை அடிமை படுத்தும் கயவன்களை.

பெண் அடிமை வேண்டாம் இங்கே
பெண்மையை காத்திடவே
பெருமையாய் வாழ்ந்திடலாம்
பேரின்பம் பெற்றிட...

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (26-Nov-14, 1:32 pm)
சேர்த்தது : மன்சூர் அலி
பார்வை : 63

மேலே