விழுகின்ற கண்ணீரெல்லாம்
அடிக்கின்ற புயல்
சில மணியில் ஓய்ந்தேதீரும்
மறைகின்ற கதிரவன்
மறுநாள் உதித்தேதீரும்
சூழ்ந்திருக்கும் கார் மேகம்
சில மணியில் கலைந்தேதீரும்
தொடர்கின்ற பயணங்கள்
ஓர் நாள் முடிந்தே தீரும்
பறக்கின்ற பறவைகளெல்லாம்
என்றேனும் கீழே வந்தே தீரும்
விழுகின்ற கண்ணீரெல்லாம்
கண்டிப்பாய் துடைக்கப் பட்டேதீரும்
வருகின்ற துயரங்களெல்லாம்
விதிவிலக்கின்றி முடிந்தே தீரும்