விதைகள்-sky

முள்ளின் மீது கால் வைத்து
வழியில் அழும் குழந்தையை
முள் குத்தி விட்டதா என்றும்
..
சற்றே உயரமாய் ஆனபின்
பையனை சட்டை சிறியது
ஆனதோ என்று கேட்பதும்
..

படிப்பில் கவனம் குறைத்திடும்
பிள்ளையை படிப்பு உனக்கு
வரவில்லை என்றே சொல்வதும்..
..
நம் வழக்கில் தனது
குறையினை பிறர் மேல்
பழி போட்டிடும் செயலுக்கு
விதைகள் ஆனதே !

எழுதியவர் : கருணா (29-Nov-14, 9:24 am)
சேர்த்தது : கருணாநிதி
Tanglish : vithaikal
பார்வை : 137

மேலே