காதலாகி

ஆணழகே
பெண் அழகை மயக்க வந்த
கதிர் சுடரே

அகராதியை புரட்டிப் போடு
உன் பெயருக்கு நிகராக
ஒரு பெயர் தேட

மதி மயங்கும் நேரத்தில்
மழலை மனதில்
சிம்மாசனமாய் அமர்ந்தவனே

உன் வீர நடையோ -என்
புத்தியை பேதலிக்க செய்கிறது

இதழ் ஓரம் விரியும் உன் புன்சிரிப்பில்
புண்ணாகிப் போனேன்

மழைத்துளியின் சிறு பனித் துளியில்
கரைகின்றதைப் போல
உன் ஒவ்வொரு பேச்சிலும்
கரைகிறேன்

தங்கத்தாமரை நடுவில்
தவழுகிறது என் மனம் -உனக்காக
அடிமையாகி -உன்
மடி தேடி நிற்கிறேன்

விரிசல்கள் இல்லா -உன்
விரல் இடையில் ஆறா விரலாக -என்
விரல் கோர்த்து பயணிக்க வேண்டும்

என் பாதச் சுவடுகள் எல்லாம் -உன்
காலடித் தடமாக மாற வேண்டும்

பொற்கொடி பூ இதழ் மேனியில்
தேனினும் இனிய உன் பார்வையை ஊற்றாதே

செவ்விதழ் சோலைக்குள் ஒளிகிறாய்
செந்தூரம் வர்ணமதில் என் உதடுகள் மேலே

பொக்கிஷ பொதிகள் போல -உன்
நினைவொன்று போதும்
நனவான என் கனவுகளும் நிறைவேற

இமை அசைத்து எனை பார்க்கும் போதே -உன்
இதயத்திலே மாட்டிவிட்ட சூனிய பொம்மை நான்
உன் விழிகளின் அசைவிற்கேற்ப அசைகிறேன்

தந்தி அடிப்பது போல -என்
மனதில் முந்தி செல்கிறாய்

தோற்றுப் போகவேண்டும்
உன்னிடம் அல்ல உன் விழிகளிடம்

எழுதியவர் : $கீர்த்தனா$ (30-Nov-14, 9:57 am)
Tanglish : kaathalaagi
பார்வை : 79

மேலே