மீண்டும் வாராதோ

உறவாடும்
பொழுதுகள்
விடியாமல்
அமிலாதோ ?

மர தழும்பில்
சருகுகள் மீண்டும்
முளையாதோ ?

மறந்த சப்தங்கள்
கீதமாய்
ஒலிக்காதோ ?

நாணம் கொண்ட பெண்மை
மொழி திறவா தேசம்
பனி அமர்ந்த புல்வெளி
கையேந்தா கூட்டம்
காலம் கடக்கா பருவநிலை
தேவை வேண்டா மனிதன்


மீண்டும் இவ்வுலகில்
வாராதோ ?????????????

எழுதியவர் : ரிச்சர்ட் (3-Dec-14, 1:11 pm)
சேர்த்தது : ரிச்சர்ட்
பார்வை : 62

மேலே