எழுதி விடு நீ

உன் கை பேசிக்கு
கடிதம் எழுதினேன்
காதலிப்பாயா?என்று
கண்டு கொள்ளாமல்
இருப்பது ஏன்? கண்ணே.
கணணியில் கடிதம்
எழுதினேன்..அப்போதும்
பதில் இல்லையே. ஏன் பெண்ணே.
கண்களில் ஜாடை காண்பித்தேன்
காணாமல் போகிறாயே ஏன்?
காதலிக்க மனம் இல்லையா?
இல்லை காதலே வேண்டாமா?
பதில் கடிதம் எழுதி விடு
காரணத்தை சொல்லி விடு
கடிதம் எழுதுவதை நிறுத்துகிறேன்
நிம்மதியாய் இருந்து விடுகிறேன்..