மண்ணில் விழுந்த மாமேதைகள்

மதவெறியர்களே....!
மனிதத்தை தொலைத்தவர்களே....!
மதவெறிக்கு மாணவர்களின்
உயிர் தான் கிடைத்ததா?
கல்விக்காக கற்க
வந்த கண்மனிகளை....!
கண்மூடித்தனமாக
கண் இமைக்கும்
கணப்பொழுதில்....!
கல்லறையில் புதைத்த
கயவர்களே....!
படிக்க வந்த
பள்ளி சிறார்களுக்கு....!
துப்பாக்கி, தோட்டா என
பாடை கட்ட வந்த
படுபாதகர்களே....!
மாணாக்கர்கள்
நெஞ்சினில் சுமந்த
கனவுகளை....!
நெஞ்சு துளைத்து
கொன்று குவித்த
கல் நஞ்சககாரர்களே....!
மடிந்த மலர்களே....!
தம் பெற்றோர்களும்
தீவிரவாதம் அடங்க
தன் உயிரை தருகிறார்களே....!
நாமும் தந்தால் என்ன
என நினைத்தீரோ....!
எதிரி நாடே என்றாலும்
எரிகிறது நம் மனம்....!
பகை நாடே என்றாலும்
பதபதைக்கிறது நம் உள்ளம்....!
வல்லரசு நாடென்று
மார் தட்டும்
மா மேதைகளே....!
மடிந்த மாணவர்களுக்கு
நீங்கள் சொல்லும்
பதில் என்ன?
இரண்டு நிமிட
மௌன அஞ்சலி
இழந்த இதயங்களுக்கு
இதத்தை தந்துடுமா....!
கண்டன குரல்கள்
கண்மணிகளை
இழந்தவர்களின்
கண்ணீரை
துடைத்திடுமா....!
மதம் பிடித்த யானை கூட
மழைலைகள் முன்
மண்டியிடும்....!
மாணவர்களின் உயிர் குடித்து
நீயும் உயிர் மாண்டு
நீ கண்ட சுகம் என்ன?
மனிதத்தை தொலைத்து
நீ மானுடத்தில்
வாழ்ந்தென்ன பயன்?
தலிபான் என்றால்
மாணாக்கர் என்று பொருள்
எந்த சமய நூலில்
நீ படித்தாய்....!
மனிதநேயத்தை தொலைத்து
மாணவர்களை கொன்று
மதத்தை வளர் என்று....!
இளைஞனே விழித்துக்கொள்....!
சில மூட சாத்தான்கள்
உன் மூளையை சலவை செய்து....!
உனக்குள் தணல் மூட்டி
அதில் குளிர் காய்கின்றனர்....!
சலவை செய்ய உன் மூளை
முழு கை சட்டைக்கு சமமா?
மத வெறியர்களை ஒழிக்க
மாதத்திற்கு ஒரு மாநாடு
தேவையில்லை....!
மதம் பிடித்த
மத வெறியர்களை
மண்ணில் புதைத்து
மக்கிடச்செய்ய
நாள் குறிப்போம்.....!