தன் நம்பிக்கை தளரேல்

... "" தன் நம்பிக்கை தளரேல் ""...

மறைந்தாலும் அழியாத
அறிவீனனென்று ஆசானால்
அகற்றிவைத்த அந்த
தாமஸ் ஆல்வா எடிசன்தான்
நம் அகிலத்தை இன்றும்
நிலைத்து ஆட்சி செய்கின்றான்,,,

கை இழந்தவர் பலரிங்கு
தன் நம்பிக்கை இழக்கா
இலக்கைநோக்கி பயணிக்க
வேறு என்னவேண்டும்
சாட்சியாய் உனக்கு
சாதித்திட தாமதமேன்
சாட்டை இறுக்கிப்பிடித்த
பம்பரம்தானே பூமியில்
சளைக்காமல் சுற்றுகிறது,,

வேடிக்கை பார்ப்பதனை
தூரமாய் நிறுத்திவிட்டு
துணிந்தே நீ இறங்கிவிடு
இறப்பதிங்கு ஒருநாள்
உறுதியான பின்னும்
உறக்கமென்ன உனக்கு
ஒரு துளி இந்திரியத்தில்
ஒழிந்திருக்கும் ஓராயிரம்
அணுவிலே ஓரணுவாம் நீ
போட்டியிட்டு கோட்டையேறி,,,

கொடியினை நட்டவனே(ளே)
அணுவாய் இருந்தபோது
துடிப்பாய் செயல்பட்டாய்
உயிர்பெற்றதும் ஏனடா
துவண்டு நீ போனாய்
வீரியமுள்ளதே விரைந்து
விதையுண்டு உயிராகும்
நம்பிக்கை தளராமலே
தரணியிலே நீ நடந்தால்,,

வெற்றியின் படிக்கட்டுகள்
உன் பாதம் வந்து முத்தமிடும்...

என்றும் உங்கள் அன்புடன்,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (24-Dec-14, 10:49 am)
பார்வை : 301

மேலே