6 பொது மக்களே பொது மக்களே
பொது மக்களே! பொது மக்களே! - ரொம்பப்
புத்திகெட்டுப் போனீர்கள் பொது மக்களே!
அரசாங்கம் சரியில்லை என்று சொல்கிறீர்! - பின்
அவனிடமே துட்டுவாங்கி ஓட்டுப் போடுறீர்!
லஞ்சவூழல் பெருகிப்போச்சு என்று கத்துறீர்! - வீட்டில்
லஞ்சம்வரும் மாப்பிள்ளைக்கே பெண்ணைக் கொடுக்கிறீர்!
கொள்ளையடிக் கிறான்பாவி என்று குதிக்கிறீர்! - பணத்தைக்
கொட்டியந்தப் பள்ளியில்தான் மகனைச் சேர்க்கிறீர்!
ஆபாசம்! ஆபாசம்! என்று கொதிக்கிறீர்! - தினம்
அந்தப்பெட்டி முன்புதான் பொழுதைக் கழிக்கிறீர்!
அநியாயம்! அநியாயம்! என்று சொல்லியே
அநியாயத் தில்நீரும் பங்கு கொள்கிறீர்!
அநியாயத் தைஎதிர்க்க சக்தி இல்லையா? - கையில்
அதைவெட்டி எறிகின்ற கத்தி இல்லையா?
ஒற்றுமையின் பலமுணர்ந்து ஒன்று படுங்களேன்!
உள்ளத்தில் பயமொழிந்து குரல்கொ டுங்களேன்!
உங்களுக்குள் முதல்மாற்றம் கொண்டு வாருங்களேன்!
ஊரும் மாறிவரப் பாடு பாடுங்களேன்!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
