பொம்மைக்குள் வாழ்கிறேன்

நான் அழுவதை
யாரும்
பார்கவில்லை,
என் கஷ்டத்தை
யாருக்கும்
காட்டவில்லை ,
காலை முதல்
மாலை வரை
வியர்வை மழையில்
நனைகிறேன் ,
என்னை பார்த்தல்
குழந்தைகளுக்கு
சந்தோசம் ,
அதவே எனக்கு
மிகவும் சந்தோசம் ,
வெயில் என்னை
சுடவில்லை
இருள் என்னை
நொறுக்கி தின்கிறது,
நடன வகுப்புக்கு
சென்றதில்லை
என் பொலப்பு
நடனத்தில்,
நான் அவ்வளவு அழகில்லை
ஆனால் என்
முகத்திரை அனைவரையும்
கவருகிறது ,
பசிக்கு பொழப்பு
தேடி அலைந்த
நேரத்தில் கிடைத்த வேலை இது ,
பொம்மைக்குள்
நுழைந்து கொண்டு
வாழ்கிறேன் ,
என் மகன்
இன்று பசியின்றி
உறங்குகிறான் ...