நீதானே
காகிதமா தெருவுல கிடந்தேனே
நீ வந்தா காவியமாவேனே
உன் காதல் சிறகு தந்தால்
நான் வானத்தில் பறப்பேனே ....
நெஞ்சில் துள்ளும் மானும் நீதானே
பூவினுள்ளே தேனும் நீதானே
அந்த தேன ருசிக்க வந்த தேனியும் நான்தானே .....
என்னை சூழ்ந்த தீவு நீதானே
என் காதல் தீர்வும் நீதானே
உன் தீவுல மட்டும் தூறும்
தூரலும் நான்தானே ....
நீ தொட்டால் முள்ளும் பூவாகும்
நீ சொன்னால் சொல்லும் கவியாகும் ... .
என் வாடகை வீட்டுல வீடு கட்டின
சிலந்தி நீதானே
அதில் சிக்கிய பூச்சி நான்தானே
நீ ஒத்த ஜாடை காட்டின போதும்
உன்னோடு ஜோடியா வருவேனே ...இல்லனா பாடியா கிடப்பேனே ......