எதுவரை

பூக்களைப் பறிகொடுக்கும்
மரணத்தின் வலி
சிதையில்

கண்களின் தவம்
உறங்குதல் வரை
காணும் வரையன்று காட்சி
கனவுகளின் போதை
தெளியும் மட்டும்

வாழ்வென்பதும் வானவில்
சில நிமிடங்களின் ரசனை
மழையென துயர்

காதல் , நட்பு
தேடும் தூரங்களின் நீட்டிப்பு
நிற்கவேண்டியது
காலத்தின் மறுதலிப்பு

எழுதியவர் : (30-Dec-14, 11:57 pm)
சேர்த்தது : யாத்ரா
Tanglish : Ethuvarai
பார்வை : 349

மேலே