வருடபிறப்பின் வாழ்த்துக்கள் 2015

விடிந்ததும் மலரும் புத்தாண்டு
விடியாதவர்க்கும் விடியட்டும்...!

எத்துனை முயன்றும்
எட்டாகனியான இன்பம்
இவ்வாண்டில் கிடைக்க இறை அருளட்டும்!!

நள்ளிரவில் கொண்டாட்டம்
விடிந்ததும் பலருக்கு திண்டாட்டம்!

ஒருநாள் கொண்டாடும் ஆண்டாய் இல்லாது
முழுதும் கொண்டாட மனத்தால் எண்ணி
இல்லாததவர்க்கு இருப்பவர் ஈது மகிழ்வோம் !

நாளை பிறக்கும் புத்தாண்டில்
மது துறப்போம்! பிறர் உயிர் காப்போம்!!

பணமிருப்பவர் இறைக்கின்றார்
இல்லாதோர் மனதால் எறிகின்றார்!!

இதுவா? இன்பம் ! எண்ணினால் இல்லை துன்பம்!
தானும் மகிழ்ந்து பிறரையும் மகிழ்ச்சியில் திளைத்தால்
அதுதான் கொண்டாட்டம் அனைவரும் உறுதிகொள்வோம்!

அர்த்தமில்லா அற்பசுகத்தை தவிர்ப்போம்
ஆண்டுக்கு ஆண்டு பிறக்கும் புத்தாண்டு
ஆயினும் அனுபவிக்காதோர் ஆயிரமுண்டு !

பேராசைகள் தோற்றால் நியதியுண்டு
ஆசைகள் தோற்பதில் நியதியுண்டோ !

ஆதரவற்றவர் ஆயிரமாயிரம்
அதில் அன்னையுமுண்டு
ஆதரிக்காதோர் ஆயிரமுண்டு அவர்க்கு
இருகரம் நீட்ட மனமற்றாலும்
ஒருகரம் கொடுத்து உதவிட மனம் வைப்போம் !

அந்நாள் நன்னாள் அதுவே
அனைவர்க்கும் புத்தாண்டாகும்
உனக்குள்ளே ஒழிந்த சோகம்
உனக்குள்ளே புதையட்டும் !

மனக்கண்ணில் ஆனந்தம் வந்து குடிபுகட்டும்
ஆதரவற்றவர்க்கு ஆதரவாய் நீ இருக்கையிலே
ஆண்டவனே நேரில் வந்து அனைவர்க்கும் ஆசி வழங்கட்டும் !!

முடிந்ததை மறப்போம் !
நடப்பதை நினைப்போம்
நாளைய விடியல் நல்லோர்க்காக இருக்க
நாம் அனைவரும் பிரார்த்திப்போம் !

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!
நினைப்பது நன்றானால் நடப்பதும் நன்றாகும் -நீதி

எழுதியவர் : கனகரத்தினம் (31-Dec-14, 4:14 pm)
பார்வை : 158

மேலே