புத்துணர்ச்சி ஊட்டும் புத்தாண்டு

பொங்கிவரும் புதுப்புனலாய் பாரெங்கும்
இன்புறவே புத்தாண்டும் பூத்ததுவே - புன்னகை
தங்கிநிறைந்திட என்றென்றும் நல்ல
காரியங்கள் கைகூடும் நல்லாண்டே!

நெஞ்சினில் இன்பம் வழிந்தோட
நாளும் நற்சிந்தனைகள் பெருகிடுமே - எங்கள்
செந்தமிழுக்கு ஏற்றம் விளைந்திடவே
எங்குமுள தமிழரும் ஒன்றிணைவரே!

கருமேகம் கலைத்திட்ட கதிர்போலே
நெடும்பகையை வீழ்த்திட்ட தமிழினமே! - இனி
தரணியெங்கும் தண்ணிழலாய் ஒளிவிடுமே!
தெள்ளுதமிழ் புத்தாண்டில் வலம்வருமே!!

எழுதியவர் : குழலோன் (1-Jan-15, 9:36 am)
சேர்த்தது : குழலோன்
பார்வை : 134

சிறந்த கவிதைகள்

மேலே