சாதி ஒழி மதம் அழி சாதி பொங்கல் கவிதைப் போட்டி 2015

அக்கினிக் குஞ்சுகள் ஆயிரம்
அடித்துப் பறந்தன..
பொந்திடை புழுங்கியதாம்
பூணூல் நாற்றங்களில்..

எளியோர்தமை வதைத்த
வீச்சரிவாள்களுக்கு
ரத்தருசி மட்டுமே தெரியும் - இனி
கைப்பிடிகளுக்கும்
கூர்தீட்ட வேண்டும்...

நவதானிய முளைப்பாரிகளுக்கு
அடுத்ததாய் நின்று
கையிடுக்குத் துண்டோடு
கைகூப்பியிருந்த உற்சவ நொடிகளில்

கருவறைச் சமாதிகளில்
திருவிழாத் திவசங்களே
கொண்டாடப் படுகின்றன....

அப்பாவிகள் தவிர்த்துப்
பார்த்தால்..
அலைமாகடல் ஒன்றே
அறம் செய்திருந்தது... ஈசாக்கும்
வின்சென்ட்டும்
சீதாராமன்களோடு சேர்த்துப்
புதைக்கப்பட்டனர்....

சாந்த மழலைகள் விடுத்து
சாதி மலைகள் பெயர்க்க
சங்குமாக்கடல் மீண்டுமொருமுறை
பொங்கவேண்டும்... பின்
சமாதானத் தோட்டங்களில்
தமிழ் மட்டுமே பூக்க வேண்டும்....

Saravanan Jaganathan
Sr.lecturer, School of pharmacy
KLMUc, Level 10
Wisma Havela Thakardhas
Jalan raja laut, Kualalumpur 50350
Malaysia HP: +60105047525

எழுதியவர் : நல்லை.சரவணா (6-Jan-15, 7:54 pm)
பார்வை : 146

மேலே