கருவறை தழும்புகள்

சிதையப்போகும் சிந்தனையில்
பதைத்து கிடக்கிறது
உதிரத்தில் கரையப்போகும்
உடலற்ற இதயமொன்று

கருவறையின் சொந்தக்காரி
கலங்கி தவிக்கிறாள்
காதல் பேச்சு பேசியவன்
காரணங்கள் சொல்லுகிறான்

முத்தம் கொடுத்த(அ)வளை
முடிவுக்கு தள்ளுகிறான்
சித்தம் குழம்பியவள்
சொல்லுவதை செய்யுகிறாள்

இரசாயன ஊற்றலிலே
மூட்டுகிறாள் கருவறை தீ
முந்தி பதிந்த வித்து
கத்தி சாகிறது

பரவாயில்லை தாயே!
சுமக்காமல் விட்டாலும் - நீ
சுடுகாடு செல்லும் வரை -உன்
நினைவறையில் நானிருப்பேன்
கருவறை தழும்புகளாய்!

எழுதியவர் : சங்கீதா இளவரசன் (6-Jan-15, 7:32 pm)
பார்வை : 84

மேலே