இளவரசன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  இளவரசன்
இடம்:  சேடக்குடிக்காடு
பிறந்த தேதி :  29-Nov-1983
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  03-Jan-2015
பார்த்தவர்கள்:  234
புள்ளி:  69

என்னைப் பற்றி...

பெயர் இளவரசன். அரியலூர் மாவட்டத்தில் உள்ள சேடக்குடிக்காடு கிராமம் எனது சொந்த ஊர். கல்வித்தகுதி, மீன் பதன துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளேன்.
தற்சமயம், இந்திய வேளான் ஆராய்ச்சி கழகத்தில், விஞ்சானியாக பணிபுரிந்து வருகிறேன். தமிழ் பிடிக்கும் என்பதால் அவ்வப்பொழுது கிறுக்குவதுண்டு சங்கீதா இளவரசன் எனும் பெயரில். சங்கீதா என் மனைவி.

என் படைப்புகள்
இளவரசன் செய்திகள்
இளவரசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Aug-2019 4:32 pm

நீண்ட-ஒரு
இருள் வெளி பாதை
நான் மற்றும் எனது
நிழல்-தனிமையில்

வெளிச்சம் கண்டாலே
வீறிட்டு வரும் சினம்

இருப்பதுக்கும் இல்லாததுக்கும்
இடையில்-ஏதோ
ஒரு வித நிலை

வெற்றிடங்களை வெறிப்பதுமாய்
கூட்டத்தில் தனித்திருப்பதுமாய்
கடந்து போகும்
நாட்காட்டியின் காகிதங்கள்

தெரிந்த மொழியிலும்
சொற்களின் ஒலி மறந்து
தவிக்கும் மனம்
பழமொழிகள் தெரிந்தும்
ஊமையை நான்


ஏதோ ஒன்று
எதுவென்று தெரியாமல்
தோன்றுவதும்
மறைவதுமாய்

ஓவென்று அழவும்
ஒலி எழுப்பி சிரிக்கவும்
கண் முன்னே
நீண்டு கிடக்கும் ஆசை

எதற்குள்ளோ அடைபட்டு கிடப்பது
போலொரு உணர்வு
இந்த ஆடைகளை கிழித்து

மேலும்

இளவரசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Aug-2016 3:17 pm

உடைஞ்சி போச்சு
கண்ணாடி போல
கண்ணு முன்னாடியே
உடைஞ்சி போச்சு
காலத்துக்கும் சேத்து வச்ச
கனவு..........

ஏதோ மனச பிசையுது
என்னென்ன சொல்ல தெரியல
அதான் ஒளறுறேன்...
எப்படி ஒட்ட வைப்பேன்
உடைஞ்சி கனவையும்
அதால
உடம்ப பிரிஞ்ச உசிரையும்...

முடியுமுன்னு நினைச்சி
மூச்சு சேத்து கண்ட கனவு
கரைஞ்சி போனா
மூச்சி
முடிஞ்சிதானே போவும்....


காத்துக்கிட்ட இருந்தவங்க
"கவலை படாத"
சொல்ல வந்துட்டாங்க...
என் கனவை காப்பாத்த
கை நீட்டாத இவங்க
தான் "உறவை' காப்பாத்த
நா நீட்டி வந்துட்டாங்க.

ஒரு மனுஷனோட
கனவை கொல்றதும்...
அவனை கொல்றதும்
ஒண்ணுதான்.....
மனுஷனுக்கு இது
எப்ப
பு

மேலும்

கனவுகள் ஏராளம் என்றாலும் நினைவில் வாழ்க்கை ஒன்று தான் 25-Aug-2016 5:25 pm
இளவரசன் - இளவரசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Mar-2015 11:28 pm

இதயம் பிய்த்து
அதை யாரோ கல்லில் அடித்து
கிழிப்பது போன்ற ஒரு உணர்வு!

சுவாசம் உள்ளே போக
தடை யாரு விதித்ததோ
தெரியவில்லை!

திடீரென வாழ்வு பாதையின்
விளக்குகளில் வெளிச்சம் இல்லை!

தள்ளாடி நடப்பவனின்
தலைமேல் பாரம் ஏற்றியது
போல் ஒரு சுமை!

இறக்கை அறுந்த பறவை
எந்த திசையில் பறந்து செல்லும்?

பிணத்தின் மேல் விழுந்த பூக்கள்
எந்த வாசம் வீசினால் என்ன?

ஒரு சொல்லுக்கு எவ்வளவு வலிமை!

நீ அதை சொல்லி இருக்க வேண்டாம்!
பதிலாக
எனை கொன்றிருக்கலாம்!

மேலும்

உன் கலகத்தில் விழுந்த கவிதை எண்கள் கண்களை கலங்க வைத்தது 23-Mar-2015 8:31 pm
தோழமையே! தங்கள் மருத்துவத்திற்கு நன்றி! இது ஒரு உணர்வு! பிறருருடைய உணர்வையும் ஒரு படைப்பாளி பிரதிபலிக்கலாம்! 20-Mar-2015 11:43 pm
கலங்க வேண்டாம் நண்பா! இன்னும் பல கவிகளை எழுதிக் கொண்ட இருங்கள் காயம் ஆறும் 20-Mar-2015 11:32 pm
இளவரசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Mar-2015 11:28 pm

இதயம் பிய்த்து
அதை யாரோ கல்லில் அடித்து
கிழிப்பது போன்ற ஒரு உணர்வு!

சுவாசம் உள்ளே போக
தடை யாரு விதித்ததோ
தெரியவில்லை!

திடீரென வாழ்வு பாதையின்
விளக்குகளில் வெளிச்சம் இல்லை!

தள்ளாடி நடப்பவனின்
தலைமேல் பாரம் ஏற்றியது
போல் ஒரு சுமை!

இறக்கை அறுந்த பறவை
எந்த திசையில் பறந்து செல்லும்?

பிணத்தின் மேல் விழுந்த பூக்கள்
எந்த வாசம் வீசினால் என்ன?

ஒரு சொல்லுக்கு எவ்வளவு வலிமை!

நீ அதை சொல்லி இருக்க வேண்டாம்!
பதிலாக
எனை கொன்றிருக்கலாம்!

மேலும்

உன் கலகத்தில் விழுந்த கவிதை எண்கள் கண்களை கலங்க வைத்தது 23-Mar-2015 8:31 pm
தோழமையே! தங்கள் மருத்துவத்திற்கு நன்றி! இது ஒரு உணர்வு! பிறருருடைய உணர்வையும் ஒரு படைப்பாளி பிரதிபலிக்கலாம்! 20-Mar-2015 11:43 pm
கலங்க வேண்டாம் நண்பா! இன்னும் பல கவிகளை எழுதிக் கொண்ட இருங்கள் காயம் ஆறும் 20-Mar-2015 11:32 pm
இளவரசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Feb-2015 4:21 pm

உனக்கும் எனக்கும் உயிரோன்றே!
உடலுள் புதைந்த மனமொன்றே!
உன்னையும் என்னையும் ஒன்றாக
என்று நீ கொள்வாய் நன்றாக!

உனக்கும் எனக்கும் உடல் குறிதானே வேறு!
அதில் உனக்கேன் இன்னும் இந்த தகராறு!
பரிமாண கூற்றை நீ சற்று உற்று பாரு!
பெண்தானே உயிரின் ஆதி வரலாறு!

ஆடுபொருளாய் உன் உடல் கூடுபொருளாய்!
உனக்கு கவிதரும் அழகு கரு பொருளாய்!
காதலித்து நீ விடும் தெரு பொருளாய் - இருப்பதாலே
இன்னும் இருக்குது எம் வாழ்வு கறுஇருளாய்!

உடலத்தின் வலிமையதை காட்டி - வைத்தாய்
வீட்டுக்குள்ளே பூட்டி - இவ்வடிமை
எண்ணத்தை ஓட்டி - எத்துறையிலும்
தருகிறோம் கடும் போட்டி

விண் மேல பறக்கும் வித்தையும் தெரிய

மேலும்

அழகென்ற சொல்லுக்குள் அவளை அடைக்கத்தான் நினைத்தாயோ! கற்பென்று பொய் சொல்லி பெண்ணினம் புதைக்கத்தான் நினைத்தாயோ! மனிதமெனும் முகத்தில் ஆணொரு பெண்ணொரு கண்ணென கொள்ளடா! ஒரு கண்ணை மறு கண்தான் குருடாக்குமோ சொல்லடா! அருமை படித்தேன் ரசித்தேன் தொடருங்கள் 26-Feb-2015 11:33 pm
அருமை அருமை படித்தேன் ரசித்தேன் 26-Feb-2015 11:03 pm
விண் மேல பறக்கும் வித்தையும் தெரியும் மண் மேல் நின்று புரியும் யுத்தமும் தெரியும் கன்னியரின் கை விரல் கணிணியும் இயக்கும் காதலென்று வந்துவிட்டால் கண்ணியம் பயக்கும் உன் அழுக்கு ஆடைகளை துவைக்க உன் நாவுக்கு சுவையை சமைக்க நீ அழைக்கையில் கட்டிலில் படுக்க பெண் எனும் எந்திரம் பிரம்மனும் தந்தானோ? // அற்புதம் தோழமையே , ரசித்தேன் , வாழ்த்துக்கள் // 26-Feb-2015 11:01 pm
முனோபர் உசேன் அளித்த படைப்பில் (public) udaya sun மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
18-Feb-2015 6:09 pm

"பாரம் எல்லாம் வலியில்,
காயம் எல்லாம் மனதில்,
எப்படியும் உழைத்து-தான் ஆகவேண்டும்...

"காலையோ, மாலையோ,
இரவோ, பகலோ, வரும் சிற்றுந்து,
இவைகளை நான் எதிர்ப் பார்த்தால்தான் என் பிள்ளைகளுக்கு நண்பகல்-விருந்து"..

"உடம்பில் எத்தனை மூட்டைகளையும் அடுக்குங்கள்
என் பிள்ளையின் பசியை மட்டும் அடைத்தால்-போதும் "

"என் இரு கைகளும் சிவந்துப்-போகும்,
ஆனாலும்
என் மனமோ அதை மறந்துப்-போகும்
என் பிள்ளையின் பசியை உணர்ந்து".

"என் முதுகெலும்பு என்னிடம் சொல்லும்
நான் உடைந்-தாலும்
நீ உருக்குலைந்து விடாதே
பின்பு உன் பிள்ளையின் பச

மேலும்

அருமை !சில இடங்களில் ஒற்றுப் பிழைகள் உள்ளன சரி செய்யவும் ! உணர்ச்சிகள் மிக ஆழமாக உள்ளன ! 13-Oct-2020 1:20 pm
அருமை ... 07-Nov-2017 9:09 am
நன்று .பாராட்டுகள் 06-Jul-2016 4:44 pm
நல்ல வரிகள் அதில் சில வலிகள் உண்மையை உவமையை பாடியதற்கு நன்றி ....... உங்கள் முயற்சி தொடரட்டும் வாழ்க வளர்க .... 20-Aug-2015 12:50 am
இளவரசன் - இளவரசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Feb-2015 6:44 pm

அதிரும் சத்தம்
அரங்கம் முழுதும்
குவிந்து கிடக்கும்
வெற்றி வாழ்த்துகள்
முன் பின் தெரியாமல்
முளைத்த உறவுகள்
இது எதையும் விரும்பாத
என் மனம்......

இந்த வெள்ளை
ஆடைக்குள் ஒளிந்திருக்கும்
தோல் போர்த்திய
உடல் தசைகள்
கிழிந்து கசியும்
சிகப்பு இரத்தம்...
எனக்கு மட்டுமே
தெரிந்த இரகசியம்...

ஏனோ மனம்
இழந்தவைகளை
மீண்டும் மீண்டும்
மென்று மென்று
புதியதாய் சேமித்துவிடுகிறது
செரித்து கழித்து
மறந்து விடத்தான் எண்ணுகிறேன்...
முடியவில்லை...முடிவும் இல்லை...

குழந்தையின் குதூகலத்தில்
வாழ்வு என் விரல் பிடித்து
பூக்கள் விரிந்த தெருக்களின்
வழியே வெற்றி மேடை
ஏற்றும

மேலும்

நன்றி தோழமையே 25-Feb-2015 11:49 pm
நன்றி தோழமையே 25-Feb-2015 11:49 pm
நன்றி தோழமையே 25-Feb-2015 11:48 pm
நன்றி தோழமையே 25-Feb-2015 11:48 pm
இளவரசன் - இளவரசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Feb-2015 6:14 pm

நான் தான் இரவு!
பூமி பெண் மறந்து போன
அவளின் முந்தைய காதலன்!
நான் எங்கும் அவளை வியாப்பித்திருந்த
காலம் ஒன்று உண்டு.

இடையில் வந்தவன்தான்
இந்த வெளிச்சம்
ஏனோ அவன் மீது
இச்சை கொண்டு
இன்னும் அவனை
அவள் சுற்றி சுற்றி
வருகிறாள்.

அவனுக்காய் விடிந்தவுடன்
பூக்களால் அலங்கரித்து கொண்டு
பூரித்து போய் நிற்பாள்.
காலையில் வருவான்
மதியம் எரிச்சல் மூட்டி
சாயந்திரம் மறைந்து விடுவான்.

நான் அவன் இல்லாத
ஒவ்வொரு நொடியும்
ஒவ்வொரு இடுக்கினிலும்
ஒளிந்து ஒளிந்து
இவளை பார்த்து...
இவளுக்காய் காத்து
கிடக்கிறேன்......

விளக்கை அணையுங்கள்
என்னவள் உறங்க வேண்டும்....
அவள் உறங்க

மேலும்

நன்றி தோழமையே 25-Feb-2015 11:44 pm
நன்றி தோழமையே 25-Feb-2015 11:44 pm
காலத்தின் மாற்றத்தை கவிதையில் புகுத்தி வரிகளில் ஒளியூட்டி இருக்கிறீர்கள்..... அருமை வாழ்க வளமுடன் 23-Feb-2015 3:40 pm
நான் அவன் இல்லாத ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு இடுக்கினிலும் ஒளிந்து ஒளிந்து இவளை பார்த்து... இவளுக்காய் காத்து கிடக்கிறேன்... மிக ரசனையான வரிகள்...படித்தேன் ரசித்தேன்... 11-Feb-2015 7:00 pm
இளவரசன் - இளவரசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Feb-2015 8:51 am

ஓடுங்கள் ஓட வேண்டும்
வெற்றி நோக்கி ஓடுங்கள்
ஓடுங்கள் ஓட வேண்டும்
என்று பொதுவாய்
கேட்ட ஒரு குரலை தொடர்ந்து
ஒவ்வொருமனிதனும் ஓடுவதை கண்டு
நானும் ஓடினேன்!

தொடர்ந்து ஓடினால் ஒழியே
நீ இந்த போட்டியில் நீடிக்க இயலாது
என்று இன்னொரு குரல்.....
வேர்க்க விறுவிறுக்க
வேகமாய் ஓடினேன்!
உறவுகள் என் ஓட்டத்தை
கை தட்டி
இன்னும் இன்னும்
என்று கத்தியவாறே இருந்தன!

சுற்றி பார்க்கையிலே
முன்னும் பின்னும்
எத்தனையோ கால்கள்
எண்ணகூட நேரமின்றி
ஓடிக்கொண்டு இருந்தன!
அக்கம் பக்கம் என்று
ஏதுமறியாமல்
முன் பார்த்த கண்
பின் பாராமல்
ஓடிகொண்டே இருந்தன!

சில சிலவற்றை முந்தியும்
சில

மேலும்

நீங்களாவது போகும் போதே இரசித்து விட்டு போங்கள்...... மெதுவாய் செல்லுங்கள்.....ஓட வேண்டாம்...... படைப்பு சிறப்பு.. 11-Feb-2015 10:04 am
இளவரசன் - இளவரசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Jan-2015 9:00 am

இளையக்கவியன் எனக்கொரு ஏகாந்த கனவிருக்கு!
புவியின் மேலே புழுதி கிளப்பிடும் கவி படைக்க!
இருண்ட என் சமுதாயத்தின் இதயம் அது உடைக்க!
மனிதம் மறந்தொரின் மறு முக தோலுரிக்க!

இளையக்கவியன் எனக்கொரு ஏகாந்த கனவிருக்கு!
புரட்சி எழுத்துக்கள் புதிதாய் நான் படைக்க!
எழுதும் வரிகளில் என் இனத்தின் வலியுரைக்க!
கனவு சிதைந்தோரின் கண்ணீர் அது துடைக்க!

இளையக்கவியன் எனக்கொரு ஏகாந்த கனவிருக்கு!
காலத்தை மாற்றும் கனத்த ஒரு கவி படைக்க!
கோலமழிந்த என் இனத்தின் கொடியதொரு வலி அறுக்க!
சிதலமாய் சிதறிய மனத்தில் சிலுக்கும் வலு சேர்க்க!

இளையக்கவியன் எனக்கொரு ஏகாந்த கனவிருக்கு!
உலகம் உலுக்கும் உண்மையொரு

மேலும்

வாழ்த்துகளுக்கு நன்றி! நட்பே! 04-Feb-2015 5:51 pm
கனவுகள் அத்தனையும் அருமை..நனவுகள் ஆக வாழ்த்துக்கள்! Martin Luther King Jr இன் உரையைக் கேட்டது நினைவுக்கு வருகிறது! 04-Feb-2015 5:39 pm
சிறப்பு ..!!! 31-Jan-2015 12:09 pm
அருமை அருமை தோழமையே ....... தொடருங்கள் ...... 31-Jan-2015 11:41 am
இளவரசன் - இளவரசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Feb-2015 12:35 am

கல்விக்கண் திறக்க
பள்ளி அனுப்பினால்
சொல்லிதருபவனோ தன்
காமக்கண் திறந்து
காத்து கிடக்கிறான்!

கல்வி கூடம் செல்லும்
பட்டாம் பூச்சிதனை
பள்ளியறை இழுத்து
இறகு பிய்க்க
இரு விழி திறந்து கிடக்கிறது
தாயின் பிணந்தின்று
வளர்ந்த புழுக்கள்

ஏதுமறியா இன்முகத்தில்
இறைவனை காணாமல்!
தனக்கு இரையாக கண்டிருக்கிறான்!
இவன் தாய் பேய் கூடி
இவனை பெற்றேடுத்தாளோ
இவன் இறந்தோரின்
பிறப்புறுப்பை
தின்று வளர்ந்தவனோ?

பெண் பிள்ளை பெற்றவனின்
புண் மனம் திடம் பெற!
கல் மனம் கொண்டவன்
உள் மனம் பயம் பெற!
நகரத்தின் நடுவினிலே!
பெருமக்கள் திரளினிலே!
இவன் பிறப்புறப்பை பிய்த்து
இவன் பின் த

மேலும்

இளவரசன் - இளவரசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Jan-2015 12:25 pm

உடல் ஒத்தி தரும்
மெத்தை தூக்கம்
உனை கேட்கவில்லை!
தலை சாய்க்க
தனக்கென ஒரு
தரை தானே கேட்டேன்!

பகட்டாக போட்டுக்காட்ட
பளக்கும் பட்டாடை
உனை கேட்கவில்லை !
அந்த இடம்
மறைத்து வைக்க
அங்குல துணிதானே கேட்டேன்!

வயிறு முட்ட மூவேளை
வகை உணவு
உனை கேட்கவில்லை!
ஒட்டிய வயிறுக்கு
வாய் கவளம் சோறு
அளவாய்தானே கேட்டேன்!

சாதிக்கும் திறனையும் ஏன் அறுத்தாய்!
சாகும் மனதினையும் நீ கெடுத்தாய்
ஏதும் இல்லாமல் ஏன் படைத்தாய்!
ஈனப்பிறப்பதனை நீ கொடுத்தாய்!

கல்லாகி போனதோ உந்தன் அகம்!
இறைவா உனக்கேன் - இந்த
பாரா முகம்!

மேலும்

நன்றி தோழமையே! 26-Jan-2015 4:18 pm
நல்லாருக்கு தோழரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 26-Jan-2015 4:04 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (10)

இவர் பின்தொடர்பவர்கள் (10)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ராம் மூர்த்தி

ராம் மூர்த்தி

ஹைதராபாத்

இவரை பின்தொடர்பவர்கள் (10)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
மேலே