எம்மொழி செம்மொழி
தமிழ் ..
எமது
உயிரினில்
உதிரத்தில்
ஊனில்
உணர்வினில்
இரண்டறக்கலந்திருக்கும்
இனியமொழி தமிழ் ..
எம்மொழி
தமிழ் ,
ஈடுஇணையற்ற
செம்மொழி !
இலக்கணணங்கள்
இலக்கியங்கள் ,
செம்மொழியாம்
எம்மொழிதமிழில் உள்ளதுபோல்
எம்மொழியில் உள்ளது ?
ஒல்காப்புகழ்
தொல்காப்பியம் ..
அகம் ..
புறம் ..
வள்ளுவம் ..
சிலம்பு ..
இன்னும்
பன்னூறு
இதயத்தில் சுவடுபதிக்கும்
இலக்கியங்கள்,
தங்கமொழி
தமிழில்தான் உண்டு .
தமிழ்
கற்கக்கற்க
கற்கண்டு .
தமிழை
அறிய அறிய
அறிவுண்டு
திருவுண்டு.
ஆயிரமாயிரம்
மொழிஉண்டு
ஆயினும்
தமிழ் போல்
மொழிஉண்டொ ?
தாய்மொழியாய்
தமிழை
வாய்மொழிய
தவம் புரிந்தோம் யாம் !
பிறந்தால்
தமிழனாய்
பிறக்கவேண்டும் .
இறந்தால்
தமிழ் கற்று
இறக்கவேண்டும் !