இதப் படிங்க முதல்ல - மணியன்

அமெரிக்காவில் வசிக்கும் சிறுவன் ஒருவனுக்கு அவசரமாக 50 டாலர் தேவைப்பட்டது.அவனும் யார் யாரிடமோ கேட்டும் கிடைக்கவில்லை.மனம் நொந்த அந்த சிறுவன் இறுதியாக தன் வேண்டுதலை ஒரு கடிதமாக எழுதி பெறுநர் முகவரியில் கடவுள் அமெரிக்கா என்று எழுதி அனுப்புகிறான்.

அந்த கடிதம் எப்படியோ ஒபாமாவின் பார்வைக்கு வருகிறது.அவரும் அந்த சிறுவனின் நம்பிக்கை வீண் போகக் கூடாது.அதே நேரத்தில் சிறு வயதில் 50 டாலரை வைத்து என்ன பண்ணப் போகிறான் என்று எண்ணி தன் சொந்தப் பணத்தில் இருந்து 30 டாலரை மட்டும் எடுத்து அனுப்புனர் முகவரியில் ஒபாமா,வெள்ளை மாளிகை,அமெரிக்கா என்று எழுதி சிறுவனுக்கு அனுப்புகிறார்.

சிறுவனிடம் இருந்து கடவுள் ,அமெரிக்கா என்று கீழ்கண்டவாறு பதில் வருகிறது.

கடவுளுக்கு நன்றி.இருந்தாலும் எனக்கு பணம் அனுப்பும் போது நேரடியாக என் முகவரிக்கே தாங்கள் அனுப்பினால் நல்லது. தாங்கள் ஒபாமா மூலம் அனுப்பியதால் அவர் 20டாலரை ஆட்டையைப் போட்டு விட்டார் பாருங்கள் .



-*-* நல்லதுக்குக் காலம் - - -





=*=*=*=*=*=*=*=*=*=*=*=

எழுதியவர் : நண்பர் (8-Jan-15, 10:40 pm)
பார்வை : 161

மேலே