இப்படியும் காதலிக்கலாம்

நிலாக்கள் எல்லாம்
என்ன பாவம் செய்ததோ..?
வர்ணித்தே வறண்டு விட்டது..!!
காதலை வர்ணிக்கும் நிலா மோசம்..!!

பூவின் அழகு,சிரிப்பு,வெக்கமென
எப்போதும் பூவுடன் ஒப்பிட்டால்
பூக்கள் என்ன செய்யும்..??
காதல் சொல்லும் பூக்கள் பாவம் ..!!

மயிலாக நடனம்,குயில் பேச்சு
அன்ன நடை என பறவையையும்
விட்டு வைக்கவில்லை..!!
காதல் அங்கிருந்து வந்தது தானே..!!

இன்னும் கொஞ்சம் போனால்
தேவதையையும்,மன்மதனையும்
கற்பனை செய்தே காலம் கழியும்!!
தெய்வீகக் காதலுக்கு இது தேவைதான்..!!

காதலை அலங்கரித்து சொல்
ஒப்பனையும் ஒப்பீடும் அவசியமோ..?
வர்ணனை இல்லை என்றால்
இங்கு காதலின் பாடு என்னாகுமோ...??

இப்படி நாமும் காதலிக்க
காதல் தேவையில்லை,
புத்திக்கு எட்டாமல் காதல் கொள்ள
எதாவது புதியதாக வேண்டும்..!!

எழுதியவர் : mano (9-Jan-15, 9:32 am)
பார்வை : 91

மேலே