கடல்

விரிந்து கிடக்கிறது
கவிதை
நீலவண்ண எழுத்துக்களால்
நிலையற்ற வாழ்வின்
நிதர்சனம் சொல்கிறது.
வாசித்து முடித்தவர்கள்
புது புது அர்த்தங்களை
சொல்லி விட்டு
வந்த வழி போகிறார்கள்.
கொஞ்சம்
காது கொடுத்து கேளுங்கள்
உங்கள் மனசு
சுத்தப்படும்.