சன்னல் நடுவே உன் முகம்

இதோ சன்னல் வழியே உன் முகம் .
புன் சிரிப்புடன் எட்டிப்பார்க்கிறாய். .
கலகலவென்று சிரிக்கிறாய்.
அச்சிரிப்பில் நான் மயங்கிப்போகிறேன்.
வெளிவேலையும் மறக்கிறேன் .
இதயத்தில் ஒரு துடிதுடிப்பு
உன்னை அள்ளத் தவிக்கிறேன் .
உன் வீடு வரத்துடிக்கிறேன்


நடுவில் பாதி முகம் காட்டுவது ஏன் ?
சன்னல்திரையில் மறைவது ஏன் ?
ஓரக்கண்ணால் என்னைப் பார்ப்பது ஏன் ?
தெருவில் போகும் கார்கள் மட்டும்
உன்னை மிகவும் கவர்வது ஏன் ?
திடீரென்று நிலவு போல்
முகம் மலர்ந்து கைக்கொட்டுவதேன்?
உன் தந்தை வருவதைப்பார்த்துத்தானோ......
இந்தக்குதி குதிப்பது ஏனோ?

தலைச்சிண்டில் உன் ரிப்பன் பறக்க.
கன்னத்தில் விழும் குழி என்னை மயக்க
உன்னை வா..வா என்று அழைக்கிறேன் .
உன் தாயிடம் நீ தஞ்சம் புகுகிறாய்,
"காக்கா பார் "என்று சோறு ஊட்ட
உன் சொப்புப் போன்றவாயைத் திற்க்கிறாய்.
உன்னைப்பார்க்கையில்
என் துயரம் மற்க்கிறேன்,,,, ,
என் வீட்டு செல்லக்கிளி
என்னைவிட்டு பறந்து போனதே,,,,

எழுதியவர் : படித்ததில் பிடித்தது (14-Jan-15, 11:23 pm)
சேர்த்தது : ஹரிணி
பார்வை : 110

மேலே