காசேதான் கடவுளப்பா
அமைதியைத் தேடி ...
ஆலயம் சென்றேன் !
சன்னிதியின் முன்னே
கையேந்தி நின்றான்...
பிச்சைக்காரன் !
கோயிலின் உள்ளே
தட்டேந்தி நின்றான் ...
பூசாரி !
கடவுளே
இது என்ன கொடுமை ?
என்று ,
கண்மூடிக் கண் திறந்தேன்
உண்டியலை ஏந்தி நின்றான்
இறைவன்!