காசேதான் கடவுளப்பா

அமைதியைத் தேடி ...
ஆலயம் சென்றேன் !

சன்னிதியின் முன்னே
கையேந்தி நின்றான்...
பிச்சைக்காரன் !

கோயிலின் உள்ளே
தட்டேந்தி நின்றான் ...
பூசாரி !

கடவுளே
இது என்ன கொடுமை ?
என்று ,
கண்மூடிக் கண் திறந்தேன்
உண்டியலை ஏந்தி நின்றான்
இறைவன்!

எழுதியவர் : தன்முகநம்பி (25-Jan-15, 11:37 am)
சேர்த்தது : தன்முகநம்பி
பார்வை : 82

மேலே