பறவையே சிறகுகள் வேண்டுமா -

பறவையே சிறகுகள் வேண்டுமா ?!! - என்
பக்கத்தில் நீயும் உயர்ந்து வா.........!! உன்

விழிகளுக்கு எட்டாத உலகங்கள் என்
விரல் நுனி துகளில் நிறைந்திருக்கு....!!

கவிஞன் என்றெனை காலம் சொல்லும் - அன்றே
கடவுள் என்றவர் சொன்னது போல்......!!

கற்பனைக்கு எட்டக் கூடியவன்தான் - நான் உன்
கண்களுக்கு எதிரில் நிற்கின்றேன்......

காசும் பணமும் என்னிடம் இல்லை எனவே உன்
கருத்துக்கு எட்டாமல் சிரிக்கின்றேன் - எனவே.....

பறவையே சிறகுகள் வேண்டுமா - என்
பக்கத்தில் நீயும் உயர்ந்து வா.........!!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (25-Jan-15, 12:11 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 95

மேலே