வாழ்கையின் அர்த்தங்கள்

இடைவெளி இருந்த போதுதான்
அதில் உள்ள இறுக்கமான அன்பை புரிந்து கொள்கிறோம்
தொலைவாக சென்ற போதுதான்
நெஞ்சில் தொலையாத நண்பர்கள் யார் யார் என்று தெரிந்து கொள்கிறோம்..,

கொடுக்கப்படும் கைகள் ஆயிரம் இந்தாலும்
நம்மை விட்டு பிரியாத உறவுகள் என்பது
ஒரு சிலர்ராகவே இருக்கின்றனர்...

எங்கயோ எடுக்கப்பட்ட புகைபடம்
இங்கே காணும் பொழுது
என்றும் தோன்றாத புன்னகை
தோன்றி மறைகிறது வானவில்லாக

கசப்பும்
களவாடி கொண்டுயிருக்கும் நினைப்பும்
அடிபட்ட வடுப்போல
பின்தொடர்கிறது என்னுடைய நிழலாக

மாறாத என் உருவத்தில்
மாறிக்கொண்டு இருக்கும்
என் நிழலை போல
மாறி கொண்டுயிருகிறது
என்னுடைய ஆசைகள்
ஒரு வடிவம் பெறாமல்..,

நின்று கொண்டுயிருக்கும்
நம் உருவத்தில்
எத்தனை எந்திரங்கள்
ஓடிக்கொண்டு இருக்கிறது
நாம் வாழ்வதற்காக...

நம் வாழ்கையின் அர்த்தங்கள்
நாம் வாழ்வதால் கிடைப்பதில்லை..
மற்றவர்களுக்காக வாழ்கின்ற போதுதான் கிடைக்கிறது..
வாழ்கையின் அர்த்தங்கள் என்னவென்று ... !!!

எழுதியவர் : காந்தி (26-Jan-15, 10:27 pm)
பார்வை : 160

மேலே