தோல்வி கண்டு துவளாதே தோழா

தோல்வி கண்டு துவளாதே தோழா! - நீ
மனம் நொந்து தேம்பாதே தோழா!
கண்ணீரை துடைத்து விடு தோழா- மனக்
கவலைதனை துரத்தி விடு தோழா!

காரியம் சிதறியதால் வீரியம் இழந்தாயா?
வெற்றி விழுந்ததனால் வேதனை கொண்டாயா?
கருப்பு நினைவுகளில் காலம் கடத்தாதே!
தோள் மாலை இல்லையென தளர்ந்துதான் போகாதே!

துவண்டு விடும் எண்ணங்களை வேரருடா!
புறம் கூறும் கூற்றுகளை நீ மறடா!-போலிப்
புகழ் மாடும் நட்புகளை நீ துறடா!- நாளை
உலகுக்கு மாதிரியாய் நீ இருடா!

விழிப்போட இருந்திடுவாய் வியர்வையை சிந்தி!
வெறியோடு போராடு எண்ணத்தை உந்தி!
வெற்றியுனை தேடி வரும் தோல்விகளை முந்தி! - அப்பொழுது
மறக்காமல் எனக்கனுப்பு களிப்போடு தந்தி!

எழுதியவர் : சங்கீதா இளவரசன் (27-Jan-15, 1:58 pm)
பார்வை : 232

மேலே