சரித்திரநாயகன் சமநீதிக் காவலன்

சரித்திரநாயகன் சமநீதி காவலன்..!
சாதிமத மில்லாத சரித்திரம் படைத்தாயேயுன்
சருமமே தீயென கொதித்திட யிவ்வுலமே -
தூரமாய் போனதால் துயரங்க ளடைந்ததோ
துடிக்கும் தீண்டாமை முள்வைத்து..!
இரவுபகலு இருந்தாலு மிதயத்தி லொளிவைத்து
இருள்நீக்கி பகலாக்கி யெரிகின்ற விளக்காகவுன் -
விழிகாணு மிடியலை எதிர்பாரா விருந்தாகுமுன்
வழிகாட்டு மெண்ணமெனில் வருமோ..?
ஆண்சாதி பெண்சாதி அடைந்தாளுன் பொஞ்சாதி
அறிவாலே யுணர்வோரே அடக்கி வைத்தவனோ-
யுன்னுறவு இல்லாம லுயிர்வாழ முடியாதெனும்
யுண்மையை மறந்து போவதேன்..?
பிஞ்செனு மொளைகூட பிழையாகு மறையுமுன்
பாராத முகத்தாலே யெவரறியா வொருநோயால்-
வேண்டியு மேண்டாதவனு பிரிவொன் றில்லாது
வாழ்க்கையி னொளியது நீயன்றோ.!
அறியாத பிள்ளைக ளறிகின்ற பள்ளியிலும்
ஆணியென குத்தி யதன்மேலே அமரவைக்கும் -
அவலத்தி னடையாள சாதியினை யெதிர்க்கவுன்
சக்தியினை கொடுத்து விடு..!
எல்லையிலா அன்புக் கென்றென்று முன்வாழ்வு
யென்றெண்ணு முலகினி லினியேது பாகுபாடு
ஆறறிவை யழித்துவரும் சாதிமத சமூகத்தில்
அறிவுக்குள் ஆழுணர்வா யுன்வாழ்வு..!