உன் பாதம் ஒரு சொர்க்கம்

இந்த
நொடி பூமியில்
பூத்த பூக்களெல்லாம்
மறுநொடியே
இறக்கும் என்றால்
அவை
அத்தனையும் பறித்து வந்து
உன்
பாதத்திற்கு பரிசளிப்பேன்
இன்னும்
ஆயிரம் ஆண்டுகளுக்கு
உன் பாதத்தில்
பத்திரமாய்
அவை உயிர் வாழும்.
ஏனோக் நெஹும் .