செக்யூரிட்டி பெயரால்

கோடி பணம் புழங்கும்
கொடுத்து உதவ கூட்டம் இல்லை..
கோடி போனால் ஓடி பிடிக்க
குருதியும் இல்லை...

இருந்தும் ,
தளர்ந்த உடையில்
தலை நிமிர்ந்து,

ஓய்ந்து போய்
ஓய்வெடுக்கும் வயதில்
பனமெடுப்பொருக்கு பாதுகாவலாய்....

பட்ட பகலும் ..
பத்து மணியும்
பனி காலமும்
பகலவன் காலமும்
மறந்து

பசிக்கும் போது
ஒரு குவளை தேனீர்
கொண்டு
பணம் காக்கும்
பாதுகாவலன்
பட்டாளத்துக்கு போயிருந்தாலும்
பரம்வீர் சக்ரா
வந்திருக்கும்

இன்று அவன்
பழைய சோறு பார்ப்பதே
பரம்பொருள் செயலாய் போனது...

ஓடி போன கொத்தடிமை
தேடி வந்து ஒட்டி கொண்டது
செக்யூரிட்டி பெயரால்.....

எழுதியவர் : முருகேசன் சத்தியமூர்த்தி (29-Jan-15, 6:29 pm)
பார்வை : 78

மேலே